Lord Siva

Lord Siva

Wednesday 28 December 2011

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவது ஏன்?


குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற் படுவதை, அரசு பொது மருத்துவம னை ஆவணங்கள் மூலம் அறிய லாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்க ளின் உடல்நிலை, அதற்கேற்ப மாறி க் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல் லை. ஆனால், வெயிலில் வாழ்பவர் கள், திடீரென குளிர் பிரதேசங்களு க்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறிவிடுகிறது.
மாற்றங்களுக்கான காரணங்கள்:
குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கி றது. இதனால், இதயம், அளவு க்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகி றது.
குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசங்க ளில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்க ள், தட்டை அணுக்கள், பைபர்நோஜன் அதிக ரிக்கிறது. கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரி க்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடு வயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.
Uinta Mountains in America
மார்பில் அழுத்தம் ஏற்படுவதுதான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத் தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கி றது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத் தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற் கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ் ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நி லை, இது போன்ற காலங்களில், மிக வும் பரிதாபம். தாறுமாறான இத யத் துடிப்புள்ள நோயாளிகள், ‘டீபிப்ரி லேட்டர்’ என்ற கருவியை பொரு த்திக் கொள்வது வழக்கம்.
இது, ‘பேஸ் மேக்கரை’ப் போலத்தா ன் என்றாலும், ‘பேஸ் மேக்கர்’ குறை ந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். ‘டீபிப்ரிலேட்டர்’ கருவி, அதி கரித்துப் போகும் இதயத் துடி
பேஸ்மேக்கர்
ப்பை சீர் செய்யும். இது போன்ற கருவி வைத்திருப்பவர்களும், மலைப் பிரதே சங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இற ங்கி விட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடுமாறும். இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, மயக்க நிலை மரணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணி வது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துப வர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடை பயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரி வடைந்து, உடல் உஷ்ணமாகும்.
பின், திடீரென உடல் வெப்பம் குறைந் து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும். சமவெளி களில்கூட, மார்கழி, தை மாதங்களி ல், இதய நோய்கள் ஏற்படுவது சக ஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்ட த்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற் படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகிய வை ஏற்படும்.
ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப் போதும் கைப் பையில், ‘சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண் டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டு ம். அப்படியும் குணமடையா விட் டால், உடனடியாக டாக்டரிடம் செல் ல வேண்டும். அது போல், ‘ஏசி’ அறை களில், 20 டிகிரி செல்சியசில், தொடர் ந்து பல மணி நேரங்கள் அமர்ந் திரு ப்பதும் தவறு.
அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், ‘ஏசி’யை அணைத்து வைக்க வேண்டும். இங் கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற கால ங்களில், 75 முதல் 84 வயதுடையவர் கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமா க்கிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment