Lord Siva

Lord Siva

Friday 23 December 2011

போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிக்க . . .


நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாரா கின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வை க்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்…
வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றி டத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும்.
பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன் னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும்.
அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவா று தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.
20 ரூபாய் – செவ்வகம், 50 ரூபாய் – சதுரம், 100 ரூபாய் – முக்கோண ம், 500 ரூபாய் – வட்டம், 1000 ரூபாய் – டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது.
கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழை யைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத் திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிற மாகவும் இது இருக்கும்.
மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிடபட்டி ருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும்போது தெரி யும்.
மாறும் நிறம்:நடுவில் அச்சடிக்கப் பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிற த்திலிருந்து நீல நிற மாக மாறும்.
அசல் நோட்டுகளை தொ ட்டு உணரும்படி மகாத் மா காந்தியின் படம் , ரிசர் வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கு ம்.

No comments:

Post a Comment