Lord Siva

Lord Siva

Friday 30 December 2011

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க & திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்


சாதித்த பிறகே திருமணம் என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளா மல் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள்.
படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்ப தையே வாழ்வின் குறிக்கோ ளாக வைத்து ஓடிக் கொண்டி ருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கை யில் அனை த்தும் இருக்கும் இளமையைத் தவிர!
15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவை யை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.
நம் நாட்டில் செக்ஸ் என்பது கெட்ட வார் த்தையாக பார்க்கப்படு கிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற் கு முன்பு ஆணும், பெண்ணும் இணை வது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலி யக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத் துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்க ல்கள் ஏற்படுகிறது. கருத்தரி க்க தாமதம். அப்படியே கருத் தரித்தாலும் சுக ப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.
காலதாமதமாக திருமணமா னவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிற து. பாட்டி காலத்திலும் அதற் கு முன்பும் வாழ்ந்த வர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்ததில்லை . அவர்கள் ஆரோக் கியமான வயதில் திருமணம்செய்து கர்ப்பமடை ந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப் பிரசவங்களே நடந்தன.
இன்று, இயந்திரங்கள் வேலைக ளைச் செய்வதால் இளைய தலை முறையினர் உடலுழைப்பை உண ர வாய்ப்பே இல்லாமல் போய் விட் டது. படிப்பு, வேலை, சொந்த கா லில் நின்ற பிறகே இல்லறம் என் றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார் கள்.
வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மை யை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதை த்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடு கிறது.ஆண்கள், தாமதமாக தி ருமணம் செய்ய வேண்டிய நிர் ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடைய வர்களாகிறார்கள். அத னால் திருமண சமயத்தில் வீரி யம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
இயற்கை இச்சைகளை தீர்ப்ப தற்காக செக்ஸ் புத்தகம், பலா ன படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தே வைகளை முறைகேடாக அணுகப்போ ய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக் காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியா ததாகி விடுகிறது.
அதற்காக இன்றைய காலத்தில் மீண் டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வி யில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கை  நிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக் கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்ட வர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடை த்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.
இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற் றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப் போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழ ந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடு கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும்.
திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்
திருமணம் தள்ளிக்கொண்டே போவதற்கு ஜாதகப்படி உள்ள காரண ங்களில் சில:
1. ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றி ருந்தாலும் அல்லது வக்கிர கதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
2. ஏழாம் வீட்டதிபதி 12ல் மறை ந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி வந்து குடியிருக்கும் அமை ப்புள்ள ஜாதகனுக்கு அல்லது ஜாதகி க்குத் திருமணம் தாமதப்படும்.
3. ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனி யுடனும் கூட்டாக இருந்தால் திரு மணம் தாமதப்படும்.
4. ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ் வாயின் ஆதிக்கம் இருந்தால் திரும ணம் தாமதப்படும். (லக் கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேர டிப்பார்வை ஏழாம் வீட்டின் மேல் விழுந்து ஜாத கனின் திருமணத்தைத் தாமதப்படுத் தும்)
5. அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாம தப்படும்.
6. சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந் தாலும் திருமணம் தாமதப்படும்.
7. சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திரு மணம் தாமதப்படும்.
8. ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வை யில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
9. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமத மான திருமணம்!
10. மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி வந்து டென்ட் அடித்து இருந்தால் திருமணம் தாமதப்படும்.
11.சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதக மாக இருந்தால் ஜாதகி திருமண வாழ்வு வேண்டாம் எனக் கூறிவிடுவாள்.
12. சனி அல்லது செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகியின் திருமணம் தாமதப்படுவதோடு, அவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவரைத் திரு மணம் செய்து கொள்ள நேரி டும்.


No comments:

Post a Comment