Lord Siva

Lord Siva

Thursday 29 March 2012

ப‌யம் ஒரு மன நோய்தான்!

எதற்கெடுத்தாலும் சிலர் பயப் படுவார்க ள். தண்ணீரைக் கண்டால் பயம், உயரமா ன இடத்தில் ஏற பயம், யாராவது கத்தி னால் கூட பயந்து நடுங்குவார்கள். இத ற்கு போபியா என்று பெயர். இதனை இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபி யா என்பது அசாதாரணமான பயம். அள வுக்கு மீறிய பயம்..
பயம் அவசியம். ஆனால் போபியா அநா வசியம். வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந் த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தா ன். வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
எதனால் இந்த போபியா ?
நூற்றுக்கணக்கான போபியா வகைகள் இருக்கின்றன. சிலர் திறந்த வெளியிலோ பொது மக்கள் மத்தியிலோ போவதற்கும் பேசு வதற்கும் பயப்படும் போபியாவினா ல் பாதிக்கப் பட்டிருக்கலாம். மாறாக சிலர் தனிமையிலே இருப்பதற்கு பயப்படும் போபியாவினால் பாதிக்கப் பட்டிருக்கலாம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம். பகலில் கூட வீட்டிலே தனியாக இருக்க பயப்படுவார் கள். சிலருக்கு இரத்தத்தைக் கண்டதும் மயக்கமே வந்துவிடும். சிலருக்கு பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி, தேள் போன்றவற் றைக் கண்டவுடனே மயக்கம் போட்டு விழு ந்து விடுவார்கள். சிலர் உயரமான கட்டிட ங்கள், மலை போன்றவற்றைக் கண்டதும் அலறுவார்கள். சிலர் கிருமிகள் கிருமிகள் என்று அளவுக்கு மீறி பயந்து நடுங்குவார் கள். ஒரு நாளைக்கு நூறு முறை கைகளைக் கழுவுவார்கள். ஒன்றும் வேண்டாம். ஹெல் மட்டைக் கண்டாலே அலறும் போபியாவி னால் பாதி க்கப்பட்டவர்களும் உண்டு.
போபியாக்கள் ஆபத்தானவை.
எல்லா நாடுகளிலுமே 7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை மக்கள் ஏதோ ஒரு போ பியாவினால் பாதிக்கப்பட்டிருக்கி றார் கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அமெ ரிக்காவில் மட்டும் 6 மில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு போபியாவினால் பாதிக்க ப்பட்டிருக்கிறார்கள் என்று மற்றொரு  புள்ளிவிபரம் கூறுகிறது.
அளவுக்கு மீறிய பயம்தான் போபியாவாகும். இது நமக்கு மட்டும ல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண் டாக்குகிறது.
சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வ ரை கொண்டு போய்விடும். ஒரு தடவை நாய் பயத்தினால் நீங்கள் பாதிக்கப்படும்போது நல் ல நாயைக் கண்டாலும் அலறி ஓடுவீர்கள்.
போபியாவின் அறிகுறிகள்
போபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் சில அறிகுறிகள் உண்டாகு ம். அளவுக்கு மீறிய அச்ச உண ர்வினால் உடல் நடுங்குவது, வியர்ப்பது, மூளைச்சோர்வு, மூக்கு ஒழுகல், இதய த்துடிப்பு அளவுக்கு மீறுவது, சுவாசிக் கவே திணறுவது போன்ற உண ர்வுகள்தான் போபியாவினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகளாகும் .
எப்படி குணமாக்குவது?
உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவ் வித போபியாக்களினால் பாதிக்கப் பட்டிருப்பார்களானால் தகுந்த மனோ தத்துவ நிபுணரிடம் காண்பி த்து சிகிச்சை அளியுங்கள். பாதிப்பி ன் விதத்தைப் பொறுத்து சிகிச்சை அளிப்பார்கள் மனோதத்துவ நிபுண ர்கள்.

No comments:

Post a Comment