Lord Siva

Lord Siva

Friday 2 March 2012

ப‌யத்தை விடுத்தால், தாம்பத்தியம் இனிக்கும்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உற வில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு கார ணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரி யவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறா ன மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன் றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.
முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொடங்கி குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலை களைக் கையாள்வது அல்லது கண் மூடி த்தனமாக ஈடுபடுவது போன்ற நடவடிக் கைகளாலும் மனைவிக்கு உறவின் மீது மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவி ல் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரி விக்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடி வு .
கூட்டுக்குடும்ப பிரச்சினை
கூட்டுக்குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினை யால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இரு ப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என் ற பயத்தில் அந்தரங் க உறவைத் தவிர்க் கவும், வெறுக்கவும் செய்வார்கள். குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதை யே தவிர்ப்பார்கள்.
உடலுறவு என்பது அவர்க ளைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்த ப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலை யில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களி ல் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந் தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்கா து. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.
எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம்
திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போ கும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனை களும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொ ய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர் பார்ப்பிற்கு எதிராக அமையும் போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதா க தெரிவிக்கிறது அந்த ஆய்வு.
சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தன க்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய்விடு மோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கு ம் பெண்களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்க ளும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.
கணவன் மீதான வெறுப்பு
தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுச ரணையாக நடந்து கொள்ளாத பட்சத்தி லும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள்,கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும். தாம்பத் திய உறவில் நாட்டமின்மை என்பது எல் லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப் பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண் டி வரும்போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர் களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப்போ ய் இணங்குவதும் உண்டு.
அழகு பற்றிய விமர்சனம்
அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூற ப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகி க் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கி டையேயான நெருக்கம் கொ ஞ்சம், கொஞ்சமாகக் குறைய க்கூடும்.
திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதி லோ தன் வாழ்க்கைத் துணை யிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இதனாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வ மே இல்லாதது போல நடிப்பார்கள். தலை வலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களி ன் அளவுகளைப் பற்றிய கவலை, உடல் வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒரு விதப் படபடப்பு, அளவுக்கதிக வியர் வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவ து சகஜமான ஒரு விஷயம்.
தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்ப து தீர்க்க முடியாத குறையில்லை என்கி றது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவன து நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குண மாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங் கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்கள்.

No comments:

Post a Comment