Lord Siva

Lord Siva

Saturday, 19 April 2014

செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகுமுறை எப்படியிருக்கும்?


செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோண த்தில் இருந்தே அணுகப் பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிற து. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகு முறை எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக் கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்தி கரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெ ரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன்மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம் கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மன ரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமை யான அறியாமை யும்கூ ட காரணங்களாக அமைந்தி ருக்கி ன்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என் றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
தனுடைய ஒரு விளைவு இன்று எல்லோ ரும் கண்கூடாகக் காணும் திருமண உறவி ல் விரிசல் – விவாகரத்து போன்றவையாகு ம்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்க ளும் சரி, திருமண வாழ்வில் இணையப் போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றி யும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றி யும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகு ம்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுக ளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத் தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாய த்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேக மாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன் பம் அனுப விக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண்களை விட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பத ற்கான உடலமைப் புடன் காணப்படுகின்றனர்..
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்ப த்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட் டுமே இவ்வி ன்பத்தை அடைய முடி யும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளி யில்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழு ச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும் பாலும் அனுபவிப்பதே இ ல்லை இவற்றை போக்கு வது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உண ர்ச்சிகளை தூண்டும் உறு ப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமை யாக அறிந்திருத் தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப் புக்களும் அதனைத் தூண் டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெ ரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிள ர்ச்சியும் அடைகி றார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போ தே மார்புகளும் பெரிதாகி றது. மார் பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமை யான உச்சகட்டத்தை அ டைகின்றனர். ஆனால் மற் றவர்கள் அந்த அளவு உண ர்வுகளைப் பெறுவதில் லை.
கணவன்,  மனைவியின் மார்பு காம்புக ளை நாக்கி னால் வருடுவதாலும், சு வைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்ட லாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுத லினால் எரிச்சல‌டைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடை ய இன்பத்திற் கேற்றவாறு தான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந் நிலையில் மார்பகங்களை எவ்வா று தூண்ட வேண்டும்?
என தங்கள் துணைவருக்கு இனி மையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளா வது கிளிட் டோரிஸ் தூண் டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தை யல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப் படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடை கின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரி ஸை தூண்டுமாறு ம னைவி கூறலாம். இதை விரல்க ளின் மூலமும், நாக்கின் மூலமும் தூ ண்ட முடியும். தொடர்ந் து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்ட த்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவ து அனை வரும் அறிந்த ஒன்று. ஆனால் பல் வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடி யும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு மு க்கிய பிரச் சினை. பெண்ணுறுப் பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணு றுப்பை மட்டுமின்றி கைவிர லைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந் நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பய மாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணு க்கு விரைப்புத் தன்மை கூட ஏற்படாமல் போகக் கூடும். இதுமுழுமையாக குணப்படுத்தக்கூடிய பிர ச்சினை என்பதை பெண் கள் தெரிந்து குணப்படுத் திக்கொள்ள முன்வர வே ண்டும். இதன் மூலம் தம்ப தியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ் க்கை- குழந்தைப் பேறு அடைய முடி யும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச் ச கட்டம் அ டையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுத ல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரண ங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந் தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெ ண்கள் தங்கள் உடலை ஆண் கள் வருட வேண் டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண் டுமெ ன நினைக்கின்றனர். ஏனெ னில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளி யானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்க ளிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடு கின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவ துபோல பெண்களுக்கு பெண் மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற் படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழ ந்தைப்பேறு பெற் றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரண ம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கி ரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படு தல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைக ளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களு டைய பிரச்சி னைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக் கான காரணங்களை அறி ந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காச நோய், புற்று நோய், இருதய நோய், சிறு நீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின் போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்தி லும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்து விடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2 பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உற வின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலிய ல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளி தாக குணப்படுத்தி விடலாம்..
மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக் கு நின்ற (மெனோபாஸ்) பின்ன ர் பாலியல் உணர்ச்சி குறைந்து விடும் என்று பலர் எண்ணுகிறா ர்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக் ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந் தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபட லாம். மாதவிலக்கு நின்ற பின் உடல் உறவில் ஈடுபடுவ தால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவில க்கு நின்று போனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசம யம் உடல் உறவின் போது எரி ச்சல் இருக்கும். இதற்கு இன் று அதி நவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமா ன இன்பம் பெற இவர்கள் மெ னோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ் மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்!!!


அழுக்குகளானது சருமத்தில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் சுருக்கங்கள் விழும் பகுதியில் தான் அழுக்குகள் அதிகம் சேரும். அதில் குறிப்பாக கழுத்து, மூட்டுகள், அக்குள் மற்றும் பல கண்ணுக்கு தெரியாத பகுதிகளில் அதிகம் சேரும். அழுக்குகள் சரியாக போகாமல் இருந்தால், அவ்விடங்கள் கருமையாக மாற ஆரம்பிக்கும். இப்படி இந்த இடங்களில் சேரும் அழுக்குகள் குளித்தால் போகாது. மாறாக வாரம் ஒரு முறை ஸ்கரப்பிங், கிளின்சிங் போன்ற முறையை தவறாமல் செய்து வந்தால், அழுக்குகளை போக்கலாம். அதற்கு கடைகளில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அப்படி பணத்தை செலவழித்து அவற்றை பயன்படுத்தி, அதனால் சில சமயங்களில் சருமத்தில் பிரச்சனைகளை சந்திப்பதை விட, இயற்கை முறை என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால், அழுக்குகளை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் போக்கலாம். இங்கு சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!


ஆயில் மசாஜ்
வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான எண்ணெயால் உடல் முழுவதும் நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் சுடுநீரில் குளித்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் நீங்குவதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பாடி லோசன் அழுக்கு உள்ள பகுதியை நீரால் நனைத்து, பின் அவ்விடத்தில் பாடி லோசனை எடுத்து தடவி, மசாஜ் செய்ய வேண்டும். பின் நகங்களைக் கொண்டு சருமத்தில் உள்ள அழுக்குகளை எடுக்கலாம். இதனால் அழுக்குகள் முற்றிலும் வந்துவிடும். ஈரமான துணி ஈரமான துணியை நீரில் நனைத்து பிழிந்து, பின் அதனைக் கொண்டு உடலைத் மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் அழுக்குகள் தங்காமல் இருக்கும்.
 எலுமிச்சை ஸ்கரப்
எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். ஆகவே ஒரு எலுமிச்சை துண்டை, உப்பில் பிரட்டி, பின் அழுக்கு நிறைந்த இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்தால், அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும். சுடுநீர் குளியல் தினமும் சுடுநீரில் குளித்து வந்தால், அழுக்குகள் தங்காது. அதிலும் அப்படி குளிக்கும் போது நன்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் அழகைப் பராமரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதுவும் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க ஓட்ஸ் உதவி புரிகிறது. அதற்கு ஓட்ஸை பால் அல்லது தயிரில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சர்க்கரை இதுவும் மற்றொரு சிறப்பான வழி. அதற்கு ஈரமான சருமத்தை சர்க்கரை கொண்டு ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும்.

Monday, 31 March 2014

தாய்பால் சுரப்பை அதிகரிக்க என்ன செய்யலாம்

குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவாக இருப்பது தாய்பால் தான். தாய்பால் சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் சக்தி தாய்பாலில் இருக்கிறது… தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் 600 கலோரியை இழக்கக்கூடும். ஆதலால் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பொருட்கள் நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்து வந்தால் தாய்பால் சுரப்பில் ஏற்படுகின்ற கலோரி இழப்புகளை ஈடு செய்து விடும். குழந்தையானது நோயிலிருந்து விடுபடுவதற்கான அனைத்து சத்துகளும் தாய்பாலில்
இருக்கிறது ஆதலால் தான் மருத்துவர்கள் தாய்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பல சந்தேகங்கள் உண்டாகும். அவற்றில் முக்கியமானது தாய்பால் சுரப்பு பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850மி.லி தாய்பால் தினமும் சுரக்கும். பால் சுரப்பை தூண்டுவதற்கும் அதிகப்படுத்துவதற்கும் நிறைய மூலிகை மருந்துகள் உள்ளன அவை என்னவென்று பார்க்கலாம். ஏலம்-3பங்கு,திப்பிலி-4பங்கு, அதிமதுரம்-6 பங்கு, ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினமும் ஒரு வேளை காலையில் உட்கொள்ளவேண்டும். நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம், நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும். 30-60 மி.லி அருகம்புல் சாற்றை தினமும் காலையில் குடித்து வர பால் சுரப்பு அதிகமாகும். அதிகம் பூண்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். பசுமையாகவுள்ள கீரைகளின் சூப் அருந்தி வந்தால் பால் சுரக்கும். கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாக செய்து குடிக்க வேண்டும். இதில் முளைக்கட்டிய வெந்தயப்பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். கடலில் கிடைக்கும் பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும். ஆலம் விழுதும், ஆலம் விதையும் சம எடை எடுத்து பாலில் காய்ச்சி உண்டால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஒரு தம்ளர் பசும்பாலில் 4பூண்டு பல் சேர்த்து நன்றாக காய்ச்சி தினமும் முன்று வேளை அருந்தி வந்தால் தேவையான பால் சுரக்கும்.