Lord Siva

Lord Siva

Monday 30 July 2012

தம்பதிகளின் தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி

தம்பதியினருக்கிடையே உள்ள‍ புனிதமான தாம்பத்திய உறவால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியதை சுட்டிக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை ! (இது முழுக்க‍ முழுக்க தம்பதியினருக் கும் அதாவது கணவன் மனைவிக்கும் மட்டுமே படிக்க‍ கூடிய கட்டுரை)
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புக ளையும் சிந்தனைக ளையும் கொண்ட இருவேறு உடல்களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற் படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒரு வர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சி யின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கிய மான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல் கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.
உடலுறவின் நன்மைகள்:
ரத்த அழற்சி சீராகி மூளைக் கு அதிக ரத்தம் பாய்கிறது.
கலவியின்போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளை யில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.
உடலுறவு ஆஸ்த்மாவை கட்டு ப்படுத்தும்.
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகி றது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவி ப்பவை.
உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல் லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீபகால ஆராய் ச்சிகள் இதனை தெளிவு படுத் தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்க ளுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண் டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடி க்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உட லுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார் கள் வலுவடைய உதவுவதாக வும் இது பிற் காலத்தில் ஏற் படும் சிறுநீர்க் கசிவு உபாதை களைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி யாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிக ளும் உறுதி செய்கின்றன. உடலுற வு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்கு கின்றது. மனது மகிழ்ச்சியடைகி ன்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இரு பாலருக்கும் உடலுறவு அவசி யமாகின்றது.
கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத் தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள் வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச் சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கி டும்.உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபா தைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டு மே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலு றவு சோர்வை கொடுத்து உட லை பலவீனமடைய ச் செய்து விடும். குறைந்த இடைவெளி யில் வாரத்திற்கு இரண்டு மு றைக்கு மிகாமல் உறவுகொ ள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்ட றியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவுகொ ள்வது உடலில் இம்மியூளோ குளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இரா சயன் பொரு ளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையா ன நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறை வதும் கண்டறியப் பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதா ல் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படு வது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத் தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதா ம்.
உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறு ப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ் நீ ரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையா க மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண் டறிய ப்பட்டுள்ளது.
திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப்போய் சோர்வ டைவது இயல்பே. இதற்கு அடிப் படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்ச நிலை யை அடைந்த பின்னர் உடல் ‘ஆக் கி டோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது. இப்பொ ருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்ற து. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண் டாக்குகின்றது. பெண் களுக்கு உடலுறவு மாத விலக்கு ஏற்படுத்தும் பல தரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாத விலக்கின் சமயம் “எஸ்ட் ரோஜனின்” அளவு சீர் செய்ய ப்படும் பொழுது, மாத விலக் கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோ ஜனின் அளவு எளி மையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாத விலக்கின் போது ஏற்படும் பல விதமான வலிகள் சோர்வு போன்ற உபா தைகள் பெரிதும் குறைவ தும் கண்டறியப் பட்டுள்ளது.ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச் சோர்வை போக்கி டும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெற வும் உடல் புத்துணர்ச்சி பெற பெரி தும் பயன்படும் அற்புத செயலாகும்.உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலு ம் என ஒப்புக்கொள்ள ஆரம்பித் து, பரிந்துரையும் செய்ய ஆரம் பித்து விட்டனர். நமது கலாச்சாரத்தில் உடலுற விற்கு கடைசியிடம் ஒதுக்கப் படலாம். ஆனால், ஆரோக்கிய மாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

No comments:

Post a Comment