Lord Siva

Lord Siva

Sunday 1 July 2012

காய்கறிகள் வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

கடையில் காய்கறிகள் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட் டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செல வழித்து நல்ல காய்களை தேர்ந் தெடுங் கள்.
* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத் து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண் டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக் கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாக வும் இருந்தால் மட்டுமே காலி ஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்கா து .
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கு ம்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்க க் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங் காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளை விட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாரு ங்கள். நார் தெரிந்தால் அது முற்ற ல், நூல் தெரிந்தால் ஓ.கே!
*சாதம் அல்லது டிபனுக்கு தொட் டுக் கொள்ளத்தான் காய்கறி என் று நினைக்காதீர்கள். அதுவும் சா ப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியா க இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்று தான் சாதம் / டிபன்.

No comments:

Post a Comment