Lord Siva

Lord Siva

Sunday 12 February 2012

ஜரிகை, விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப் புகள்:

பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப் பது அவசியமாகும். இந்த விலை உயர் ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.
ஜரிகை, மற்றும் விலை உயர்ந்த உடைக ளை பாதுகாக்க சில குறிப் புகள்:
1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்கு வதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச் சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
2. விலை உயர்ந்த புடவையை அணிவ தற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்” தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்தி ரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
3.அணிந்து கழற்றியவுடனே துணி களை மடித்து வைப்பதை தவிர்க் கவும். இவ்வாறு செய்தால் துணி களில் உள்ள வியர்வை கறைக ளை ஏற்படுத்தக் கூடும்.
4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாச னை துணிகளில் ஒட்டிக் கொ ள்ளும். அணியும் போது அல மாரி யின் வாசனையை தரும்.
6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொரு ட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.
7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகை யில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
8. அணியும்போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்த பின் உடைகளை இஸ்திரி செ ய்து வைக்கவும்.
9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தர மான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலை யுய ர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.

No comments:

Post a Comment