Lord Siva

Lord Siva

Saturday 26 November 2011

கருப்பையை பாதுகாக்க . . .


கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார் மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர் கள் சந்திக்கும் பிரச்னை கள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போ ன்றவை குறித்து விளக் குகிறார் மகப்பேறு மற் றும் மகளிர் சிறப்பு மரு த்துவர் சுமதி செந்தில் குமார்.  பெண்கள் வயது க்கு வந்ததில் இருந்து மாத விடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இரு ந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சி யடை ந் து குழந்தை பிறக்கிற து. பலரும் சினைப்பை யும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கி றார்கள்.
பெண்களின் சினை முட் டைப்பையில் உருவாகு ம் ஈஸ்ட்ரோஜன் ஹார் மோன் தான் பெண் தன் மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப் படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெ ல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாத விடாய் நிற்கும் சராச ரி வயது 51. மாத விடாய் நிற்பதற்கு முன்பே கருப்பை யை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆ ளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்க மின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மன உளைச்சல், உடல் வலி போன்ற பிரச் னைகள் தாக்கும்.
சிறுநீர்ப்பையில் கிருமித் தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய் மானம் மற்றும் முது கெலும்பு உடைதல் உள் ளி ட்ட தொந்தரவுகளும் வரும். பெண்கள் 45 வய துக்கு முன்னரே கருப்பையை எடுக்கும்போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடி யாத காரணத்தால் கருப்பை யை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச் னைகள் வராமல் தடுக்க லாம் என்று சிலர் நினைக்கி ன்றனர். ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலே யே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோ பாஸ் அறிகுறி களுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெ ன்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர் விளைவுகளை ஏற்படுத் தும்.
ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போ ன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக் கும். எனவே கருப்பை யை எடுப் பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.
பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட் டிகள், வெள்ளைப்படுதல் ஆகிய வற்றை காரணம் காட்டி கருப் பையை அகற்ற வேண்டாம். இது போன்ற பிரச்னை களுக்கு மாற் று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இரு த்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப் படாமல் போதல் போ ன்ற வழியில்லாத கார ணத்தால் மட்டுமே கருப்பையை அகற்ற லாம். பிறகு கட்டி வர லாம் என்ற கற்பனை யில் கருப்பையை அக ற்றக் கூடாது.
நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள் ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர் களை அணுகும் போது சரி யான மருத்துவம் கிடைக் கும். கருப்பை அகற்றும் அறுவை சிகி ச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக் கும். கருப்பை வாயில் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள் ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற் றும் சினை முட்டைப்பை யை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ரெசிபி
ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள் ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள் ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள்  ஆகிய வற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங் காயம் – பாதி, தக்காளி 1, கருவேப்பிலை மற்றும் கொத் தமல்லி தேவையான அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகிய வற்றை பொடியாக்கிக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க் கவும். மஞ் சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்த மல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.
பனீர் கேரட் குருமா: பனீர் அரை கப், கேரட் கால் கிலோ, வெங்காயம் 4, தக்காளி 4, சோம்பு, பட் டை, கிராம்பு, ஏலக் காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு உள்ளிட்டவற் றை வதக் கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை தனியாக வதக்கி அரை த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விட வும். மஞ்சள் தூள், உப்பு,  கர ம் மசாலாத் தூள் சேர்க்க வும். தக்காளி, வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும். இறுதி யில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சே ர்த்து பரிமாறலாம்.
நூடுல்ஸ் கட்லட்: தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன் ஸ், பச்சைப் பட்டாணி யை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும். உ ருளைக் கிழங்கை தனி யாக வேக வைத்து மசி த்துக் கொள்ளவும். இஞ் சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத் த நூடுல்ஸ், வேகவைத் த காய்கறிகள், உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள் ளவும். வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக்கொ ள்ள வும். பிசைந்த கலவை யை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல் லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
டயட்
அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். பரம் பரை காரணங்களாலும் பெண்களு க்கு வரலாம். ரத்தத்தில் சர்க்க ரையின் அளவை சோதித்து கட்டுப் பாட்டில் வைக்க வேண்டியது அவ சியம். அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல், தின மும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற் றிக் கொண்டால் தான் கருப்பை யை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உண வுகள் உட்கொள்ள வேண்டும். இரு ம்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள், பதப்ப டுத்தப்பட்ட உணவு கள், இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம், மாவு ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவி ர்க்க வேண்டும். அரிசி உணவு களையும் குறைக்க வேண் டும். உணவில் ஒரு கப் சாத த்துடன் இரண்டு கப் காய்கறி இருக் குமாறு பார்த்துக் கொ  ள்ள வேண்டும். கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். மு ளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகிய வற்றை வாரம் இரண்டு முறையாவது சேர் க்க வேண்டும்.
கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெ னில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரி க்கும். மேலும் சாதத்துக்கு பதி லாக பழங்கள், கீரைகள் அதி கம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற் று ஏற்படாதவாறு சுத்தத்தை க டை பிடிக்க வேண்டியதும் அவசி யம் என்கிறார்  உணவு ஆலோச கர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப் பிட்டால் உடல் சூடு தணியும்.
மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங் காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகிய வற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள் ளவும். மாத விலக்கு தடைபடும் கால ங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட் டால் மாதவிலக்கு ஏற்படும்.
விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வை த்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.
வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பி ட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.
லவங்கப் பட்டையை பொடி செ ய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாத விலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச் னை குணமாகும்.
முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண் டால்  கருப்பை பலப்படும்.

No comments:

Post a Comment