Lord Siva

Lord Siva

Saturday 1 October 2011

பாலுறவுப் புணர்ச்சி விதிகள்


Posted On Oct 1,2011,By Muthukumar


"வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்துபோக
எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம்கழிந்து போக
சொறிநாய்களும்
விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும்
வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக்கொண்டிருக்க
எங்கும் புணர்ச்சி."
வாத்ஸான்யர் இங்குதான் செய்ய வேண்டும் என புணர்ச்சிக்கு விதிகள் தந்திருக்க வாய்ப்பில்லை. ஓவியங்கள் போலவும் சூத்திரங்களிற்கமையவும் எப்போதும் புணர முடியாது. புணர்ச்சி மனித இயல்பு. அது மூடிய அறைகளுக்குள், நிறை வாசனைத்திரவியங்களுடன், உயரிய இசைக் குறிப்புடன் தான் நடக்க வேண்டுமென்றால் சேரிகளில் மனிசர் புணரவே முடியாது.. யாரும் பார்க்காமல் செய்யணும் என்பதே ஒரு மரபுசார்ந்த மனநிலையின் பாதிப்பாற்பட்டதுதான். புணர்ச்சி எப்போதும் 'மறைவுக்குரியது' அல்லது கலைஞர்கள் அதை 'நடக்க நினைக்கிற அழகிய பின்னணிகளிலேயே' அதை நடத்த வேண்டும்.
இது ஒரு வன்முறை இல்லியா? துவாரகன் சொல்வதுபோலவோ, சினிமாவில் போலவோ பாடல்களின் துணையுடனா யதார்த்தத்தில் புணர்ச்சி நடக்கிறது? அது ஒரு இயல்பில்லையா..
இந்தக் கவிதையில் அதை ஒரு இயல்பாக விடாத, குற்றமாகவோ அருவருப்பாகவோ பார்க்கிற (தனக்கு விரும்பாத மாதிரி நடப்பதை விரும்பாத) மனநிலை, நிறையக் கவிதைகளில் காணலாம். கவிஞர்கள், மதகுருக்கள், மற்றும் மனிதர்களைப் பொறுத்தவரை அதை குற்றமாகவோ அருவருப்பாகவோ பார்ப்பதிலிருந்து வெளி வர முடிவதில்லை. அதனாற்தான் அதை 'அழகுபடுத்த' பாடாப் படுகிறார்கள்... அழகுபடுத்தப்படாத சூழல்களில் இருப்பவர்களது புணர்ச்சி (இக் கவிதையில் வருகிற குஸ்டரோகியினது அல்லது சேரிகளில்) இவர்களால் தாங்க முடியாது. அதனாற்தான் கவிதையில் -அதை மறைக்க - இரவு அவசர அவசரமாய் இரவை விழுங்குது.. அப்ப, பகலில் நடந்தால்!
தமிழ் இலக்கணம் படித்தோர்புணர்ச்சி விதிகள்என்றொரு அதிகாரத்தைப் படித்திருப்பர். மொழியிலுள்ள எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொருள் தருவதை இலக்கணம் இத்தலைப்பில் சுட்டுகிறது.
ஆண், பெண் உணர்ச்சி வழியே நடத்தும் கிளர்ச்சியையும் மருத்துவ நூல்கள் புணர்ச்சி என்கின்றன. மனித இனம் தழைத்தோங்க இந்த உணர்ச்சிப் புரட்சி அவசியம் தேவை. இதன் விதிமுறைகளை சிதித்ஸாதிலகம், பாவப்பிரகாசம், அஷ்டாங்கஸங்கிரஹம், ஷேமகுதூஹலம், ஸாஸ்ருதஸம்ஹிதா, காச்யஸம்ஹிதா, கல்யாணகாரகம், சரகசம்ஹிதா, பேலசம் ஹிதா, அஷ்டாங்க ஹிருதயம் முதலிய பண்டைய மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
எப்போது புணர்ச்சி : மனிதனுக்கு எப்பொழுதும் உடற்புணர்ச்சியில் விருப்பமுண்டாகிறது. அவன், இரவில்தான் தன் மனைவியுடன் புணரவேண்டும். பகலில் ஒருபோதும் பெண்ணை நுகரக் கூடாது. ஆண் இருபத்தைந்தாவது வயதிலும், பெண் பதினாறாம் வயதிலும்தான் முற்றிலும் பெறப்பட்ட சக்தியுடையவர்கள் ஆகிறார்கள்.
எங்கே புணர்ச்சி ? : மிகவும் மறைவானதும், அழகானதும், இனிமையான பாடலுடன் கூடியதும், நறுமணமுடையதும், இதமான காற்றுள்ளதுமான இடத்தில் கூடவேண்டும். பெரியோர் அருகில் இருக்கும்போது, வெளிப்படையானதும், வெட்கத்தை அளிக்கக்கூடியதும், துன்பத்திற்கு ஏதுவான சொற்கள் கேட்கக்கூடியதுமான இடங்களில் எப்போதும் மனைவியுடன் சேரக் கூடாது.
புணர்ச்சிக் கேற்றவ(ள்)ன் : குளித்து முடித்தவனும், அமைதி கொண்ட மனத்தினனும், நறுமணம் பூசியவனும், தூய்மையான ஆடை உடுத்தி, ஆண்மைக்கேதுவான பொருட்களை உண்டவனும், மனைவியிடம் மிகுந்த காதல் கொண்டவனும், மிக்க மன எழுச்சி கொண்டவனுமே பெண்ணுடன் கூடத் தகுதியானவர்கள்.
புணர்ச்சியின் பின்னே : கூடிய பிறகு குளித்து நறுமணப் பொருளைப் பூசுதல், குளிர்ந்த காற்றைக் கிரகித்தல், நீர் சேர்த்த அன்னத்தைப் புசித்தல், கற்கண்டினால் செய்த சிற்றுண்டியைச் சுவைத்தல் முதலியவற்றைச் செய்யவேண்டும். இவைகள் ஆணின் சுக்கிலத்தை விரைவாக மீண்டும் உற்பத்தி செய்து விடுகின்றன.
புணர்ச்சியின் பின் ஆகாதவை : மேற்கூறியவற்றைச் செய்யாதவன் ஆயுள், ஓஜஸ் (உடலின் ஏழு தாதுக்கள்) விந்து முதலியவற்றை இழக்கிறான். இதனோடு ஆண் குறியில் நோய்களையும், வாயுவின் கிளர்ச்சியையும் சந்திக்கிறான். இன்னும், நெருப்பினருகில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், தேகப் பயிற்சி, துக்கம் இவற்றைக் கைவிடவும் வேண்டும்.

புணர்ச்சியின் காலம் : மனிதன் எல்லா ருதுக்களிலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீதம் பெண்ணைக் கூடலாம். கோடையில் மட்டும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான். ஆடியில் புணர்ச்சியைக் கைவிட வேண்டும்.
அதிக புணர்ச்சி ஆகாது : கால நியமங்களை மீறி பெண்ணைச் சேர்பவனுக்கு தலைச்சுற்றல், உடல் வாட்டம், தொடையில் வலு குறைவு, தாதுக்கள் அழிவு இவை தோன்றும். அகால மரணம்கூட அழைப்பதுண்டு. மேலும், வயிற்றுவலி, இருமல், ஜுரம், சுவாச நோய், இளைப்பு, சோகை, வலிப்பு இவையும் வந்து வாட்டும்.
அளவான புணர்ச்சியின் பலன் : பெண்களிடம் அளவுடன் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவன் ஞாபக சக்தி, தாரணா சக்தி, ஆயுள், நோயின்மை, வளர்ச்சி, திறமை, புகழ் இவைகளைப் பரிசாகப் பெறுகிறான். இளமை வளர்ந்து ஓங்க, கிழட்டுத்தனம் ஒதுங்கி வழிவிடும்.
பதினாறாயிரம் பேரை தசரதன் புணர்ந்த காலத்திலேயே ஒருத்தியோடு மட்டுமே வாழ முற்பட்ட ராமன் கதாபாத்திரமும் இந்திய சமுதாயத்தில் உண்டு. மனிதகுலம் நலம் பெற ஒழுக்கம் சார்ந்த வாழ்வையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையும் தமிழ் மறையான திருக்குறளும் வலியுறுத்துகிறது. இன்று பலவித நோய்ச் சிக்கல்கள்கூட (எய்ட்ஸ்) இந்த உயரிய பண்பால் விடைபெறும் என்பது திண்ணம்.

(நன்றி:eegarai)


புணர்ச்சி
கவிதை

முற்றுப்பெறாத கதை இன்னமும் தொடர்கிறது. மிக அவசர அவசரமாக ஒவ்வொருவராக புணர்ந்து கொள்கிறார்கள். புனிதம், அந்தரங்கம் எல்லாம் அவசர அவசரமாக தன்நிலை இழக்கிறது.
வீரியம் குறைந்து விடும் என்பதற்காகவோ முதுமை வந்துவிடும் என்பதற்காகவோ அழகு குலைந்து விடும் என்பதற்காகவோ முழுதாக அவிழ்க்காத ஆடைகளோடு புணர்ந்து கொள்கிறார்கள்.
மூத்திரம் கழிக்கும் சந்துகளில் வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில் மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்
வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்து போக எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம் கழிந்து போக சொறிநாய்களும் விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும் வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக் கொண்டிருக்க எங்கும் புணர்ச்சி.
மூத்திரம் கழிக்கும் சந்துகளில் வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில் மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்
இரவு அவசர அவசரமாக இருளை விழுங்கிக் கொள்கிறது.


No comments:

Post a Comment