Lord Siva

Lord Siva

Saturday 1 October 2011

மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு

மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தைபேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வு களை மேற்கொண்டு வருகின்றனர்.
கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்த புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட் டனர்.
எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வ கத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மல ட்டு தன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர்.
இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. என வே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சி க்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பய ன்படுத்தவும் நிபுணர்கள் முடிவு செய்துள் ளனர்.
இதன் மூலம் மலட்டுத் தன்மை பாதித்துள் ள ஆயிரக்கணக்கான ஆண்கள் பயன் பெற முடியும் என கருதுகின்றனர். இந்த சிகிச்சை முறை ஆண்களுக்கு வரபி ரசாதமாக இருக்கும்.

No comments:

Post a Comment