Lord Siva

Lord Siva

Friday 3 August 2012

தாயின் கர்பப் பையில் இருந்து இதயம் உருவாவது எப்படி?

தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ் வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது. தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக் குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது.
இந்நிலையில் இதயத்தின் முன்னோடி யான முதிரா அமைப்பானது ஒரு தீக் குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந் நிறமருந்தின் அளவில் இருக்கும். இதய மாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக இரண்டு மெல்லிய குழல்களாகத் தோ ன்றுகின்றன.
பிறகு, இந்த இரண்டு மெல்லி ய குழல்களும் இணைந்து ஒரே குழ லாக உருமாற்றம் பெறுகின்றன. அதன்பிறகு இந் தக் குழலானது நன்கு வளர் ச்சி பெறத் தொடங்குகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பிறகு இக்குழல் போன்ற அமைப்பா னது (S) என்ற ஆங்கில எழுத் து வடிவில் உருமாற்றம் அடைகிறது.
கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயம் இந்த நிலையை அடையும். இந்நிலையில் முதிராத குழல் பகுதி யின் உடல் பகுதியானது (Truncus) நன்கு வளரத்தொடங்குகிறது. இதயக் குழலின் உடல் பகுதியானது, முழு மையாக வளர்வதற்கு முன்னரே இத யத்தின் உள் அறைகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் (Septal) உருவாகத் தொ டங்குகின்றன.
முதிர்ச்சி அடையாத இத யக் குழலின் உடல் பகுதியானது நன்கு வளர்ந்து மகா தமனியாகவும் (Aorta) நுரையீரல் தமனியாகவும் தனித்தனியா கப் பிரிக்கின்றன. இதயம் இயங்குவதற்குப் பக்கபலமாக ஓர் மின் அமைப்பும் அதனுள் செயல்படுகிறது . கருவுற்ற ஆறாவது வாரத்தில் இதய த்தின் மின்அமைப்புகள் (Electrical apparatus) உருவாக ஆரம் பிக்கின்ற ன.
இதில் வியப்புக்குரிய விஷயம் என் ன தெரியுமா? இதயத்தின் மின் அமை ப்புகள் உருவாதற்கு முன்னரே இதய மாவது துடிக்க தொடங்கி விடுகிற து. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயத்தின் தடுப்பு சுவர்களும் நான் கு வெளிப்புற சுவர்களும் முழுமை யாக உருவாகி ன்றன.
இதயம் மற்றும் அதற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சி கருவுற்ற மூன்றாவது வாரம்தொடங்கி ஆறாவது வாரம் வரை நடை பெறுகிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு உறுதுணையா க இருக்கும் பல வகையான வால்வுகள் அனைத்தும் இத யத்தின் உரு வாக்கத்திலும், வளர்ச்சியிலும் குழல் தோன் றுதல், குழல்கள் இ ணைதல், இதயக்குழல் சுழலுதல், தடுப் புச்சுவர்கள் உருவாதல், ரத்த க்குழாய்கள் தோன்றுதல், ரத் தக் குழாய்கள் சுருங்குதல் போன்ற வை மிகவும் முக்கியமான கட்ட ங்களாகக் கருதப்படுகின்றன.

No comments:

Post a Comment