Posted on January 25, 2012 by muthukumar
டீன்ஏஜில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் கலாசாரம் அமெரிக்கா
உள்ளிட்ட
நாடுகளில் அதிகரி த்து வருகிறது. இதுதொடர்பாக அமெரி க்காவின் ஒஹியோ மாநில
மருத்துவ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற் கொண்டனர். பிற ந்து 40
நாட்கள் ஆன பெருச் சாளிகளை வைத்து ஆய்வு நடத்தினர். நன்கு வளர்ந்த வை,
மீடியம் வயதில் இருப் பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன. செக்ஸ்
உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோத னை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம்
மருத்துவ ரீதியாக ஏற்பட் டிருக்கும் மாற்றங்கள் ஆராய
ப்பட்டன.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறிய தாவது:
மற்ற
பிரிவுகளுடன் ஒப்பிடும் போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் செக்ஸ்
உறவுக் கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட் டிருந்தன. அவற்றின் அன்றாட
செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு காணப் பட்டது. நரம்பு மற்றும் மூளை
செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தன. அன்றாட உணவைக் கூட உண்ணாமல் ஒரே இ
டத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத் தில் இருந்த எலிகள் வழக்கம் போல இருந்தன.
இளம்
பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம் பு மண்டல வளர்ச்சியை
பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறு தியாக தெரிகிறது. மனிதர்களுக்கு
ம் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலு ம்
எதிர்காலத்தில் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment